"மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மகிழ்வித்த மாவட்ட ஆட்சியர்.." | Thanjavur

Update: 2024-10-11 13:11 GMT

உலக மனநல தினத்தையொட்டி தஞ்சை வடக்குவாசல் அன்பாலத்தில் வசிக்கும் 25 பேரும் சுற்றுலா செல்ல மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஏற்பாடு செய்தார். அன்பாலய பணியாளர்கள் உதவியோடு அவர்கள் தஞ்சை பெரிய கோயில், அரண்மனை வளாகம், ராஜாளி பறவைகள் பூங்கா, தஞ்சாவூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். எல்லாவற்றையும் உற்சாகமாக பார்த்து மகிழ்ந்த மனநலம் பாதிக்கப்பட்டோர், ராஜாளி பூங்காவில் கிளிகள் கையில் அமர்ந்ததை ரசித்தார்கள். அருங்காட்சியகத்தில் அன்போடு ஆடிப்பாடியவர்கள், சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்