கையில் அரிவாளுடன் கோயிலுக்கு நபர் செய்த செயல் - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-09-27 04:22 GMT

திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் கருவறைக்குள் புகுந்த நபர், ஆடு வெட்டும் அரிவாளை எடுத்து, அங்கிருந்தவர்களை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னால் சென்று அந்த நபரை துணிகரமாக பிடித்த ஒருவர், மர்ம நபரின் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி, கன்னத்தில் அறைந்தார். கோவிலில் இருந்த பக்தர்கள், பிடிபட்ட நபருக்கு தர்மஅடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்