டாஸ்மாக் கடைகளில் வந்த மாற்றம் - விரைவில் தமிழகம் முழுவதும்

Update: 2024-10-02 04:15 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக ஏழு அரசு மதுபான கடைகளில் ஸ்கேனர்& பில்லிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 110 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 7 டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பில் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . விரைவில் தமிழகம் முழுவதும் இம்முறை செயல்பாட்டுக்கு வர உள்ளது. மதுபாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி. விலைக்கு பில்லுடன் மது பாட்டில்கள் விற்கப்படுவதால் வாடிக்கையாளர் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்