விபத்தில் புதுப்பெண் பலி- மாப்பிள்ளை தற்கொலை முயற்சி

Update: 2024-09-21 05:26 GMT

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே

சாலை விபத்தில் புதுமணப்பெண் உயிரிழந்த சோகத்தில்

மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேவகோட்டை அருகே உள்ள பரியன்வயல் கிராமத்தைச் சேர்ந்த முத்துமணிக்கும், வளங்காவயல் கிராமத்தைச் சேர்ந்த ராமையாவுக்கும் கடந்த 8-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதி இருவரும், வளங்காவயலில் இருந்து பரியன்வயலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஆறாவயல் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் முத்துமணி படுகாயம் அடைந்த நிலையில், ராமையாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காரைக்குடி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துமணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி இறந்த தகவலை அறிந்த ராமையா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தேவகோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற அவர், ஆபத்தான நிலையில் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஆறாவயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்