தி.மலை செல்லும் பக்தர்களுக்காக ஏற்படப்போகும் அதிரடி மாற்றம்

Update: 2024-09-21 07:45 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலப்பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், 45 கோடிமதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும், பயணிகளின் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் திருவண்ணாமலையில் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்