இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு.. அரசின் அதிரடி நடவடிக்கை

Update: 2024-09-21 07:40 GMT

கடந்த 3 ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68 ஆயிரத்து 39 பேருக்கும், தனியார் நிறுவனங்களில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 55 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பல்வேறு துறைகளில் உள்ள தேர்வு முகமைகள் வாயிலாக 34 ஆயிரத்து 384 நபர்களுக்கு பணி நியமணம் வழங்கப்பட்டுள்ளது. நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்களின் வாயிலாக 33 ஆயிரத்து 655 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 2 ஆண்டுகளில் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு முன்னெடுப்புகளால், 3 ஆண்டுகளில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 55 பேர் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக, 27 லட்சத்து 73 ஆயிரத்து 847 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்