"சாதி மோதலை ஊக்குவிக்கும்.." - ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு

Update: 2024-09-21 07:28 GMT

புதுச்சேரியில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அவர், நாட்டின் தனித்துவமான ஆன்மிக கருத்தை அழிக்க கடந்த காலங்களில் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், சுதந்திரத்திற்குப் பின் தலைமைக்கு வந்தவர்களும் பாரத சக்தியைக் குழிதோண்டிப் புதைக்க முயன்றனர் என்றும் கூறினார். நமது தனித்துவமான ஆன்மிக வலிமையை மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்றும் அவர் கூறினார். ஐரோப்பிய மதச்சார்பின்மையை நாம் நிராகரிக்க வேண்டியது அவசியம் என்றும், அனைவருக்கும் சமமான மரியாதை அளிக்கும் மதச்சார்பின்மையை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். சமூக மற்றும் சாதி மோதலை ஊக்குவிக்கும் அரசியல் சித்தாந்தத்தையும் நாம் கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்