எதிர்பாராத நேரத்தில் ஓபிஎஸ் வீட்டில்நடந்த கல்யாணம்.. பார்த்து பிரமித்த பொதுமக்கள்! | OPS

Update: 2024-09-21 07:27 GMT

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீநிவாஸ பெருமாள் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்ட சாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி, ஊஞ்சல் சேவை, காப்பு கட்டும் நிகழ்ச்சி, திருமாங்கல்யம், யாக பூஜைகள் ஆகியவை நடத்தப்பட்டன, இதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது, குடும்ப சங்கடங்கள், தேர்தல் ஆகியவற்றுக்கான பூஜையாக இருக்கலாம் என்று ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்