புதுச்சேரியில் ஓடும் பேருந்தின் பின் சக்கரத்தில் விழுந்து இளைஞர் தற்கொலை

Update: 2024-10-20 10:52 GMT

புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியில் தொழிற்சாலைகள், கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளதால் நாள்தோறும் அதிக அளவு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்கின்றன.

இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் உள்ள சாலையாக இது உள்ளது.

இந்த நிலையில், அந்த சாலையில் இன்று ஓடும் பேருந்தின் பின் சக்கரத்தில் விழுந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சியில் வெளியான பதிவில், சாலையின் ஓரமாக நடந்து சென்ற வாலிபர்,சாலையை கடப்பது போல நின்றிருந்த நிலையில், வேகமாக வந்த பேருந்தின் பின் சக்கரத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார் இதில் பேருந்து ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து பதிவாகியுள்ளது.

தற்கொலை சம்பவம் தொடர்பாக போக்குவரத்து போலிசார் வழக்கு பதிவு செய்து அந்த நபர் யார்? என்ன காரணம் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்