2 மகன்களுடன் கட்டிட தொழிலாளியை துடிக்க துடிக்க கொன்ற தந்தை... சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-10-19 05:50 GMT

2 மகன்களுடன் கட்டிட தொழிலாளியை துடிக்க துடிக்க கொன்ற தந்தை... சிவகாசியில் அதிர்ச்சி சம்பவம்


சிவகாசியில் மது போதை தகராறில் கட்டட தொழிலாளியை படுகொலை செய்த, தந்தை மற்றும் 2 மகன்கள் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகாசி அருகே நாரணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். கட்ட‌ட தொழிலாளியான இவரும், பக்கத்து தெருவை சேர்ந்த விநாயகமூர்த்தி அவரது மகன்கள் வைரப்பிரகாஷ் விக்ரமனும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது, ஏற்பட்ட தகராறு காரணமாக, விநாயகமூர்த்தியும் அவரது மகன்களும், ராஜசேகரை ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். ராஜசேகரின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விநாயகமூர்த்தி அவரது மகன்கள் வைரப்பிரகாஷ், விக்ரமன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்