"வாரத்துக்கு புது புது நோய் வருது" - சிவகங்கையை பரபரப்பாக்கிய சம்பவம் கொந்தளிக்கும் மக்கள்

Update: 2024-10-19 12:23 GMT

சிவகங்கை மாவட்டம் 16வது வார்டு பகுதியில் உள்ள லட்சுமி தீர்த்தம் என்ற ஊரணியில் கழிவுநீர் கலப்பதால் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் அடைப்பு ஏற்பட்டதாக கூறி செப்டிக் டேங்க், கழிவுநீர் ஊரணியில் பாய்ச்சப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, குழந்தைகள், முதியோர்களுக்கு பல்வேறு நோய்கள் வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்