வாங்காத கடனுக்காக மிரட்டல் கொடுத்த தனியார் நிதி நிறுவனங்கள்.. "பணம் கட்டவில்லை என்றால் வெட்டுவோம்"

Update: 2024-10-01 05:31 GMT

வாங்காத கடனுக்காக மிரட்டல் கொடுத்த தனியார் நிதி நிறுவனங்கள்.. "பணம் கட்டவில்லை என்றால் வெட்டுவோம்"

#thanthitv

ராமநாதபுரம் மாவட்டம் வளையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். மாற்றுத்திறனாளியான இவர், தனது மனைவியின் ஆவணங்களைப் பயன்படுத்தி அவருக்கே தெரியாமல் நான்கு நிதி நிறுவனங்களில் ஏஜெண்ட் ஒருவர் கடன் வாங்கி இருக்கிறார் என்றும், அவர் வாங்கிய கடனுக்கான தவணைகளைக் கட்டுமாறு தங்களை நிதி நிறுவனங்கள் தொல்லை கொடுத்து வருவதாகவும் குற்றம் சுமத்தி இருக்கிறார். மேலும் இந்த தொல்லைகள் காரணமாகக் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வீட்டில் தங்காமல் பொது இடங்களில் தங்கி வருவதாகச் செல்வராஜ் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விரைந்த செல்வராஜ், தன் குடும்பாத்தாருடன் சேர்ந்து இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவர் புகார் அளித்து இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்