"விற்க விடமாட்றாங்க".. அதிகாரிகளுடன் வாக்குவாதம்.. பழனியில் பரபரப்பு

Update: 2024-07-22 16:10 GMT

திண்டுக்கல் மாவட்டம் பழனி உழவர் சந்தையில், கடைகளை முறைகேடாக வியாபாரிகளுக்கு ஒதுக்குவதாகக்கூறி, அலுவலருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்குவதாக புகார் எழுந்த நிலையில், சில விவசாயிகளுக்கு தங்களுக்கு கடைகள் இல்லாமல் போனதால் அதுகுறித்து முறையிட்டனர். இதனால் உழவர் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்