பாளையங்கோட்டை சிறையில் காவலருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் - நெல்லையில் பரபரப்பு

Update: 2024-09-13 16:03 GMT

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில், மதுரையைச் சார்ந்த பிரபல ரவுடி மீனாட்சி சுந்தரத்திற்கும், ராஜேஷ் என்பவருக்குமிடையும் மோதல் ஏற்பட்டுள்ளது. சிறைக்குள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை மேற்கொள்வதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறை காவலர் மகேந்திரன் இதனை தடுக்க சென்றிருக்கிறார். அப்போது கைதி மீனாட்சி சுந்தரம் சிறை காவலர் மகேந்திரனை முகத்தில் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, கைதிகளிக்கிடையே ஏற்பட்ட மோதல் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்