``மிரட்டியவர்கள் யார்..?'' புது குண்டை போட்ட அண்ணாமலை - பரபரப்பை கிளப்பிய பதிவு

Update: 2024-06-21 14:52 GMT

கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் தீவிரமாக இருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ், அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் விருப்ப ஓய்வு பெற்றார் என்பதை தற்போதைய கள்ளச்சாராய மரணங்கள் உறுதிப்படுத்துவதாக, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மோகன்ராஜை மிரட்டியவர்கள் யார் என்பதையும், இதனை அறிந்தும் நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறை அதிகாரிகள் யார் என்பதையும் விசாரித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்