மது போதையில் பணியில் இருந்த காவலர் சஸ்பெண்ட் | Police | Erode

Update: 2024-10-06 03:36 GMT

சரக்கு வாகன ஒட்டுநரை மிரட்டிய விவகாரத்தில் சம்மந்தப்பட்ட காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டு இருக்கிறார்.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள சின்னபள்ளம் பகுதியில் போலீசாரின் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்த காவலர் செல்வக்குமார் மது போதையில் அவ்வழியாக வந்த சரக்கு வாகனங்களை நிறுத்தி ரூ 2000 கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வாகன ஒட்டுநர்கள் ஒன்று கூடி காவலரிடம் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் செல்வகுமார் மதுபோதையில் மிரட்டியது தெரியவந்ததைத் தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்