சேலத்தையே உலுக்கிய அதிர்ச்சி வீடியோ... கண்கள் மேலே போக தலைசுற்றி கிறங்கிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள்

Update: 2024-10-06 04:14 GMT

சேலம் மாநகராட்சி அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் போதை ஊசி போடும் இளைஞர்களின் கூடாரமாக மாறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலம் மாநகராட்சி ஆனந்தா பாலம் பகுதியில் மாநகராட்சி அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் ஐந்து அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தும் ஆசாமிகள் தங்களது கூடாரமாகவே மாற்றிக் கொண்டுவிட்டனர். ஐந்து தளங்களிலும் எங்கு பார்த்தாலும் பயன்படுத்தப்பட்ட போதை ஊசிகள், மாத்திரை, மதுபானம், கஞ்சா என குவிந்து காட்சியளிக்கிறது. இந்த இடங்களில் தந்தி டிவி குழுவினர் நேரடியாக சென்று ஒவ்வொரு பகுதிகளாக பார்வையிட்ட போது போதை ஊசி பயன்படுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் வீடியோ எடுப்பதை பார்த்தவுடன் உடனடியாக எழுந்து ஓடும் காட்சிகள் அதிர்ச்சி ஏற்படுத்தியது. அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்ட போதைப் பொருட்களின் சிரஞ்சி உள்ளிட்டவைகள் குவிந்து காட்சியளிக்கிறது. இது குறித்து கேட்டால் அவர்கள் பயங்கர ஆயுதங்களோடு வந்து தாக்குவதாக மிரட்டல் விடுப்பதாக கூறிய அப்பகுதி மக்கள்,. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்