சென்னை அருகே பெண் செய்த அதிர்ச்சி...பகீர் வாக்குமூலத்தால் சிக்கிய கூட்டம்..

Update: 2024-10-09 09:35 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 50 சதவீதம் மட்டுமே தங்கம் இருக்கும் போலி தங்க நகையை பயன்படுத்தி, ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

கனகம்மா சத்திரம் பஜார் பகுதியில் உள்ள நகை அடமான கடையில், 8 சவரன் நகையை ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் அடமானம் வைத்துள்ளார். அவர் சென்ற பின் நகையை பரிசோதித்தத்தில் அதில் பாதி தங்கம், பாதி போலி என தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் நகையை அடமானம் வைத்த லதா சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், இதுபோன்ற நகையை டெல்லியில் இருந்து வாங்கி வருவதும், இதே போன்று பல அடமான கடைகளில் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இந்த மோசடி கும்பலை சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை கைது செய்ய புகார் கொடுத்த அடமான கடை உரிமையாளரிடமே சொகுசு காரை வாங்கி சென்ற காவல்துறையின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்