ஐடி ஊழியரை குடும்பத்தோடு எரித்து ஒன்றுமே தெரியாதது போல் நிற்கும் அரக்கன் - ஷாக் வீடியோ

Update: 2024-07-20 03:04 GMT

ஐடி ஊழியரை குடும்பத்தோடு எரித்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல் நிற்கும் அரக்கன் - தந்தி டிவி கேமராவில் சிக்கிய காட்சி

கடலூர், காராமணிக்குப்பத்தில் தாய், மகன், பேரன் ஆகியோர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், கூட்டத்தோடு கூட்டமாக குற்றவாளியும் நின்று வேடிக்கை பார்த்த வீடியோ வெளியாகியுள்ளது.

காராமணிக்குப்பத்தில் தாய், மகன், பேரன் ஆகிய 3 பேரை கொலை செய்த வழக்கில் சங்கர் ஆனந்த், சாகுல் அமீது கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 15 ந்தேதி 3 பேர் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவி பொதுமக்கள் அவர்கள் வீட்டின் முன்பு திரண்டு இருந்தனர். அப்போது கைது செய்யப்பட்ட சாகுல் அமீது, அப்பாவி போல் கொலைக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லாதது போல் மக்களோடு மக்களாக நின்று வேடிக்கை பார்த்தபடியே கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார். அங்கு நடக்கும் சம்பவங்கள் குறித்து, சென்னையில் பதுங்கியிருந்த மற்றொரு குற்றவாளி ஆனந்த் சங்கருக்கும் தகவல் அளித்துள்ளார். சாகுல் ஹமீது மக்களுடன் நிற்கும் வீடியோ தந்தி டிவியில் செய்தியாக அன்றே ஒளிபரப்பானது. 3 பேர் உடலை போலீசார் கைப்பற்றிய நாளில் சாகுல் அமீது மக்களுடன் மக்களாக நோட்டமிட்ட வீடியோ தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்