பேருந்து நிலையத்தில் தாயை தவிக்க விட்டு ஓடி போக பிளான் போட்ட மகள் காரோடு வந்த காதலன்...கதறிய தாய்... பார்த்த நொடியில் கோவை மக்கள் செய்த தரமான சம்பவம்

Update: 2024-09-05 08:18 GMT

காதல் விவகாரத்தில், கோவையில் அரங்கேறியிருக்கும் பரபரப்பு சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

காதலனுடன் செல்ல முயன்ற மகளை, தடுத்து நிறுத்தி மன்றாடிய தாய்... தாயுடன் செல்ல மறுத்து மகள் முரண்டு பிடிக்கவே, பொதுமக்கள் கூடி களேபரமானதில், ஸ்தம்பித்த போக்குவரத்து. பூர்வீகம் தஞ்சாவூரான நிலையில், கோவையில் தங்கி நூற்பாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த பெண், கோவை மதுக்கரையை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார்..

இந்த விவகாரம் அறிந்த பெண்ணின் தாய், மகளை அழைத்து செல்வதற்காக கோவை வந்ததில்தான் இந்த சம்பவம்..

பெண்ணின் காதலுக்கு அவருடைய வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது...

இந்நிலையில், தாயுடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண், தன் காதலனுக்கு ரகசியமாக தகவல் கொடுத்திருக்கிறார். இதன்படி சம்பவ இடத்திற்கு காரில் வந்திறங்கிய காதலனை கண்டதும், அவருடன் காரில் ஏறி செல்ல பெண் முயன்ற நிலையில், பதறிப்போன தாய், காரை மறித்து மகளுடன் மல்லுக்கட்டிய களேபரம் தான் இது...

இந்த சம்பவத்தில், பொதுமக்கள் கூடி பகுதியே பரபரப்பானது. இதில் சிலர் காரில் வந்த இளைஞர்களை தாக்க முயன்றது பரபரப்பை மேலும் கூட்டியது..

கூட்ட நெரிசலால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போலீசாருக்கு தகவல் பறந்திருக்கிறது...

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாயிடம் இருந்தும், காதலனிடம் இருந்தும் பெண்ணை மீட்டதை அடுத்து அவரை காப்பகத்தில் தங்க வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்