சென்னையில் 10 வயது சிறுவன் கையை கடித்து குதறிய நாய்.. "ரத்தம் ஊத்த வந்தான்.. இப்போ ICUல.."

Update: 2024-09-21 05:18 GMT

நெற்குன்றம் பால்வாடி 2வது தெருவை சேர்ந்த வீரமுத்து செல்வி தம்பதியின் 10 வயது மகன் கேசவன். ஐந்தாம் வகுப்பு படித்து வரும் கேசவன், குப்பை போடுவதற்காக நடந்து சென்ற போது, தெருநாய் ஒன்று கடித்துள்ளது. இதனால், கையில் பலத்த காயம் ஏற்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடையில் இருந்து சதை எடுத்தும் பொருத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால், கூலி வேலை செய்யும் பெற்றோர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அதே நேரத்தில், தெருநாய்களை பிடித்து பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று நெற்குன்றம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்