சரித்திர பதிவேடு குற்றவாளிகளை அலறவிடும் `ஆபரேஷன் அகழி'.. இறங்கி அடிக்கும் போலீஸ் | Trichy

Update: 2024-09-21 07:02 GMT

திருச்சி மாநகர போலீசார் நடத்திய ஆப்ரேசன் அகழி ரெய்டில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆப்ரேசன் அகழி என்ற பெயரில் 25 தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் சோதனையில் இறங்கினர். இதில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் வீடுகள் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், 258 சொத்து ஆவணங்கள், 68 வங்கி கணக்கு புத்தகங்கள், 31 மது பாட்டில்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும், கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டது என விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 19ம் தேதி நடத்தப்பட்ட சோதனையின் போது தப்பியோடிய, சந்திரமவுலி என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இருந்த 2 நாம் தமிழர்கள் கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய நிலையில், அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆப்ரேசன் அகழியின் வாயிலாக இன்னும் பல சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர் 

Tags:    

மேலும் செய்திகள்