"ஹரியானாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் பாஜகவை பழிதீர்க்கும்" - அரவிந்த் கெஜ்ரிவால்

Update: 2024-09-21 07:14 GMT

ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் பிரம்மாண்ட சாலை பேரணியை மேற்கொண்டார். பிரசார கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், ஹரியானா அரியணையில் இருந்து பாஜக விரட்டப்படும் என தெரிவித்தார். ஹரியானாவை சேர்ந்த ஒவ்வொரு குழந்தையும் இனி, பாஜகவினரை பழி தீர்ப்பார்கள் என கெஜ்ரிவால் தன் உரையில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் நீதி மன்றத்தின் முன்பு தான் நிற்பதாகவும் தன்னை நேர்மையானவர் என்று கருதி மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்தால் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்