"சென்னை முழுவதும் அதிரடி மாற்றம்" - கமிஷனர் அருண் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-10-22 14:18 GMT

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை தியாகராய நகர் மற்றும் பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். தி.நகர் சாலையில் நடந்து சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட அவர் மாம்பலம் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் அருண், ரங்கநாதன் தெரு சுற்றிலும் அதி தொழில்நுட்பம் வாய்ந்த 64 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார். ஏழு உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்