மனைவியை குத்தி கொலை செய்து நாடகமாடிய கணவர் சிக்கியது எப்படி..? கதிகலங்கிய கூடுவாஞ்சேரி | Chennai

Update: 2024-09-20 14:27 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே மனைவியை இரும்பு கம்பியால் குத்தி கொன்றுவிட்டு, நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

மாடம்பாக்கத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் தைலாவரத்தை சேர்ந்த சந்தானகுமார். கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய அவரது மகள் காவியா, தாய் பரமேஸ்வரி கழுத்தில் படுகாயத்துடனும், தந்தை சந்தானகுமார் மயங்கிய நிலையிலும் வீட்டில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருவரையும் ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பரமே​ஸ்வரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்​. இதுதொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி பரமேஸ்வரியை கொலை செய்ததை சந்தானகுமார் ஒப்புக்கொண்டார். கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்