தாம்பரம் ரயில் நிலையத்தில் சிக்கிய ரூ.4 கோடி - வெளியான புதிய தகவல்

Update: 2024-09-20 16:12 GMT

தாம்பரத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் பாஜக செயலாளர் கேசவ விநாயகத்தை நீதிமன்ற அனுமதியுடன் தான் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கேசவ விநாயகத்தை புலன் விசாரணைக்கு அழைக்கும் பட்சத்தில், ஒரு வாரத்துக்கு முன்பு அவர் வசிக்கும் முகவரிக்கு ஒரு வாரத்துக்கு முன் நோட்டீஸ் வழங்க வேண்டும் சிபிசிஐடிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடியின் சம்மனுக்கு ஆஜராகலாம் அல்லது அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று கேசவ விநாயகத்துக்கு அனுமதியளித்த உச்சநீதிமன்றம், மேல்முறையீடு மனுவை முடித்து வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்