ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... கைதானவர்களுக்கு செக் வைத்த போலீஸ்

Update: 2024-09-20 16:35 GMT

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை, காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் உள்பட மேலும் 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் அவர்கள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் கடந்த 7-ந்தேதி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்