சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட ஆதம்பாக்கம் வானுவம்பேட்டை தெற்கு புது தெருவில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில்
70-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி
பயின்று வருகின்றனர். மழை தண்ணீர் பள்ளி
வளாகத்தில் தேங்குவதால் பள்ளி கட்டிடம் அருகே
புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் அருகில் செயல்படும் அம்மா உணவகத்தின்
ஒரு பாதியில் தரையில் அமர்ந்து மாணவ மாணவிகள்
கல்வி பயின்று வருவதாக பெற்றோர் புகார்
தெரிவித்துள்ளனர். புதிய கட்டட பணிகள் முடியும் வரை
வகுப்புகள் நடைபெற மாற்று இடம் வழங்க வேண்டும்
என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.