மொத்தமாக இடித்து தள்ளிய அதிகாரிகள்... அந்தரத்தில் தவித்த ஊழியர்கள்... பரபரப்பு காட்சி

Update: 2024-09-20 16:13 GMT

ஈரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது, கடையின் மேல்தளத்தில் இருந்த படிக்கட்டுகள் அகற்றப்பட்டதால், கடையின் ஊழியர்கள் கீழே இறங்க முடியாமல் அவதியடைந்தனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தொடர்ந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் இருந்த கடை ஒன்றின் மேல்தளத்தில் இருந்து கீழே இறங்கும் படிக்கட்டுகள் ஆக்கிரமிப்பு காரணமாக அகற்றப்பட்டன. இதனால், கடையில் இருந்து வெளியேற முடியாமல் ஊழியர்கள் தவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்