இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

Update: 2024-03-08 13:59 GMT

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த அறிவிப்பை அவர்கள் வெளியிட்டுள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகி ராபர்ட், மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்