சென்னையில் இரு போலீஸ்களின் மன்மத லீலைகள்.. முகத்திரை கிழித்த 2 பெண்கள்

Update: 2024-10-04 06:34 GMT

போலீசாரான கணவர், இரண்டாம் திருமணம் செய்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும், புகாரளித்தால் 2ஆம் திருமணம் செய்வதெல்லாம் தவறில்லை எனக்கூறி போலீசார் அலைக்கழிப்பதாகவும் சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகாரளித்திருக்கிறார்.

தர்மபுரி மாவட்டம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சிந்துஜா. இவர், சென்னை துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் செளந்தராஜன் என்பவரை, 4 வருடங்களுக்கு முன் திருமணம் செய்திருக்கிறார். தம்பதிக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், செளந்தராஜன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு சிந்துஜாவை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் புகாரளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லையெனக்கூறும் சிந்துஜா, இரண்டாம் திருமணம் செய்வதெல்லாம் தவறில்லை எனக்கூறி போலீசார் அலைக்கழிப்பதாக சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்திருக்கிறார். இதேபோல், சென்னை இருப்பு பாதை காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் தன் கணவர் பிரசாத், பல பெண்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக மற்றொரு பெண் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்