நள்ளிரவில் கோயம்பேட்டை அலறவிட்ட கதறல் சத்தம்.. "யாரு சார் ரைட்ஸ் கொடுத்தது?"

Update: 2024-09-20 02:53 GMT

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரவில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள், போலீசார் தடியடி நடத்தியதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில், நாற்றுக்கணக்கானோர் இரவு நேரத்தில் தூங்குவது வழக்கம்.

நேற்றிரவு அங்கு தூங்கிக் கொண்டிருந்த மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், ஆதரவற்றவர்கள், பொதுமக்களை, இங்கு தங்கக்கூடாது எனக் கூறி போலீசார் தடியடி நடத்தி வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், போலீசாரை கண்டித்து பேருந்து நிலைய வாசலில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் தாக்கியதில் சிலருக்கு காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்