"பத்தரமா வச்சிக்கணும்.. இங்க கொடுங்க" - பேப்பரில் சுருட்டி கொடுத்த 4 போலீஸ்? - காத்திருந்த ஷாக்

Update: 2024-09-20 05:30 GMT

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போலீசார் போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஜி.என்.டி. சாலையில் நடந்து சென்ற மதீனா பீவி என்பவரை வழிமறித்த மர்ம நபர்கள், தங்களை போலீசார் என அறிமுகம் செய்து, செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், செயினை பையில் வைத்து செல்லவும் என கூறியுள்ளனர். தொடர்ந்து அவர் செயினை கழற்றவே, பேப்பரில் மடித்து தருவதாக கூறி அவரிடம் இருந்து செயினை வாங்கி பேப்பரில் கல்லை வைத்து கொடுத்து ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்