ஆம்ஸ்ட்ராங் கொலையில் திடுக்.. செல்வப்பெருந்தகைக்கு தொடர்பா? - ராகுல் கையில் அதிர்ச்சி கடிதம்

Update: 2024-09-20 05:26 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகைக்கு தொடர்பு உள்ளதாகவும், அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், ராகுல்காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.அவர் எழுதியுள்ள கடிதத்தில், பிரபல வன்முறைக் கும்பல் தலைவன் நாகேந்திரனுடைய மகன் அஸ்வத்தாமனை இளைஞர் அணி பொதுச் செயலாளர் ஆக செல்வபெருந்தகையால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அஸ்வத்தாமன் தனது தந்தை நாகேந்திரன் மற்றும் செல்வபெருந்தகைக்காக தொழிலதிபர்களிடம் பணம் வசூல் செய்து கொடுக்கும் வேலை செய்து வருவதாகவும், செல்வபெருந்தகை துணையுடன் ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்ய அஸ்வத்தாமன் திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய செல்வபெருந்தகையை ஏன் கைது செய்யவில்லை? என்று பெரும்பாலானோர் கேள்வி எழுப்பி வருவதாகவும், தேசிய காங்கிரஸின் மாநிலத் தலைவர் என்பதால் திமுக மற்றும் காவல்துறை கைது செய்ய தயங்குவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து செல்வபெருந்தகையை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்