"அவங்க என் கஸ்டமர்..!" 2 பெண்ணால் கடை ஓனர்களுக்கு இப்படி ஒரு நிலையா..? வெளியான பகீர் சிசிடிவி..

Update: 2024-09-19 17:18 GMT

பெங்களூருவில் தனது கடைக்கு வந்த வாடிக்கையாளர், பக்கத்து கடைக்கு சென்றதால் ஆத்திரம் அடைந்த உரிமையாளர், பக்கத்து கடைக்காரருடன் சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்பேட்டை பகுதியில் உள்ள துணிக்கடைக்கு 2 பெண்கள் சென்ற நிலையில், பல்வேறு துணிகளை பார்த்த பின் அருகே இருந்த வேறொரு கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் பக்கத்துக்கடைக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்