மருத்துவம் படித்த மாணவர்களுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடு பல்கலைக்கழகங்களில் படித்து, மருத்துவ பயிற்சியை முடிக்காத மாணவர்களுக்கு...

Update: 2022-04-30 07:42 GMT
மருத்துவம் படித்த மாணவர்களுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு...

உக்ரைன் போர், கொரோனா தொற்று காரணமாக வெளிநாடு பல்கலைக்கழகங்களில் படித்து, மருத்துவ பயிற்சியை முடிக்காத மாணவர்களுக்கு, இந்தியாவிலேயே மருத்துவ பயிற்சியை முடிக்கும் திட்டத்தை  2 மாதங்களுக்குள் வகுக்க இந்திய மருத்துவ ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்தியாவிலேயே மருத்துவ பயிற்சியை முடிக்கும் மாணவர்களின் திறனை அறிய இந்திய மருத்துவ ஆணையம் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்