தூத்துக்குடி : தடைசெய்யப்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருபவரின் வீட்டிற்குச் சென்று, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-05-13 03:35 GMT
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருபவரின் வீட்டிற்குச் சென்று, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதி தடை செய்யப்பட்டுள்ளதால், அங்கு நடைபெற்று வரும் சுகாதார பணிகளைப் பார்வையிட்டார். அப்பகுதியில் உள்ளவர்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.‌கோவில்பட்டி காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.


Tags:    

மேலும் செய்திகள்