சுடிதார் போட்டும் சொதப்பிய பிளான் - விரக்தியில் ஆண் செய்த காரியம்- பரபரப்பு சிசிடிவி

Update: 2024-10-22 04:24 GMT

கேரள மாநிலம் கொல்லத்தில், சுடிதார் அணிந்து சென்று ஒருவர் ஏ.டி.எம்.மில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த அந்த நபர், திடீரென சிசிடிவி கேமராவை பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு, ஏடிஎம் இயந்திரத்தை கம்பியால் உடைக்க முயன்றுள்ளார். ஆனால், எதுவும் பலனளிக்காத நிலையில், இயந்திரத்தில் இருந்த ஒயர்களை அறுத்து எறிந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும், செல்போன் சிக்னலையும் ஆய்வு செய்த போலீசார், திருட முயன்ற ராகுல் என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்