இந்தியாவுக்கு சிறப்பு ஏற்பாடு - பாக். கிரிக்கெட் வாரியம் கடிதம் | IND vs PAK

Update: 2024-10-19 12:52 GMT

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் மண்ணில் இந்திய அணி போட்டிகளில் விளையாட வேண்டும் என, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், பாகிஸ்தானில் தங்குவதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கருதினால், ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும் இந்திய அணி வீரர்கள், டெல்லி அல்லது சண்டிகருக்கு திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்