இலங்கையின் அடுத்த அதிபர்.. தீர்மானிக்கும் இடத்தில் இந்தியா.. அனுப்பிய அழுத்தமான மெசேஜ்

Update: 2024-08-30 09:40 GMT

இலங்கையில் 2 நாள் அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கொழும்பில் இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்தார். அப்போது, இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இந்தியா விரும்புவதாக தோவல் தெரிவித்தார். இதனிடையே, தோவலை, தமிழ் தேசிய அரசியல் கட்சி பிரதிநிதிகள், கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்தனர். இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. மாவை சேனாதிராஜா, எம்.பி.க்கள் எஸ்.சிறிதரன், சுமந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, அதிபர் தேர்தல் நிலவரம், பொது வேட்பாளர் விவகாரம், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்வாக அமையும் என்று தான் கருதுவதாக தோவல் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்