தொகுதி மறுவரையறை குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புரிதல் இல்லை என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மறுவரையறை எதிர்ப்பு என்பது திமுக மட்டும் பேசுகின்ற கருத்து அல்ல எனவும் குறிப்பிட்டார்.