"தமிழகம், புதுச்சேரி மக்களை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மக்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2020-01-27 23:29 GMT
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மக்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில்   புதுச்சேரியில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று  பேசிய அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, நீட் தேர்வுக்கு எதிராக புதுச்சேரி அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக கூறினார்.  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்