இந்த ஏரியால ஸ்வீட் கடை வச்சிருந்தா.. உஷார்

Update: 2024-09-21 06:59 GMT

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் லூர்துபுறம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கடையை உடைத்து மைசூர் பாக், மற்றும் கடலை மிட்டாயை, தின்று சென்றுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் கரடியை கண் காணிக்க முதற்கட்டமாக கேமரா வைத்துள்ளனர். மேலும் கரடியின் நடமாட்டத்தை பொருத்து கூண்டு வைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்