நிலச்சரிவால் மின்னல் வேகத்தில் பரவும் புதிய அபாயம்.. அலர்ட் கொடுத்த அமைச்சர்

Update: 2024-08-06 09:28 GMT

வயநாடு பேரழிவை தொடர்ந்து தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். வயநாடு மாவட்டத்தில் இதற்காக சுகாதாரத்துறையின் கீழ் மாவட்ட அளவிலான கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டுவந்து உடற்கூராய்வு செய்யும் இடத்தில் காவல்துறை, சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், மீட்புக் குழுவினர், பத்திரிகையாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் DOXY PROPHYLAXIS தடுப்பு மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்