இந்தியாவில்.. கடைசி நாட்களை எண்ணும் 561 பேர் - அதிசயம் நிகழுமா?

Update: 2024-02-11 07:08 GMT

டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின், இந்தியாவில் மரண தண்டனை தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சிறுமியை கடத்தி கொலை செய்த வழக்கில் கடந்த 2008-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் கடந்த ஆண்டு நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனு செய்த 488 பேர் உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்தில் 33 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்