மகாராஷ்டிராவில் திடீரென இடிந்து விழுந்த 12 அடி தண்ணீர் தொட்டி... 3 பேர் பலி

Update: 2024-10-24 09:06 GMT

மகாராஷ்டிராவில் திடீரென இடிந்து விழுந்த 12 அடி தண்ணீர் தொட்டி... 3 பேர் பலி.. 7 பேருக்கு நேர்ந்த கதி

மகாராஷ்டிர மாநிலம், பிம்ப்ரி சின்ச்வாட்டின் போசாரி பகுதியில் இன்று காலை தண்ணீர் தொட்டியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர், 7 பேர் காயமடைந்தனர். விபத்தில் பலியானவர்கள் அனைவரும் தொட்டிக்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள்ஆவர். இந்த சம்பவம் என்சிசிஎல் நிறுவன தொழிலாளர் முகாமில் நடந்தது. அங்கு சுமார் 200 தொழிலாளர்கள், பெரும்பாலும் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். அவர்கள் குளிப்பதற்கு 12 அடி நீளமுள்ள பெரிய தொட்டி அமைக்கப்பட்டிருந்தது.விபத்து நடந்த அன்று காலை, பல தொழிலாளர்கள் தொட்டியின் அடியில் குளித்துக் கொண்டிருந்தபோது, ​​அது இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் நசுங்கினர்.

தொட்டி தரமற்றதாக இருந்ததால் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. தரமற்ற கட்டுமானங்கள் குறித்து

அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்