``அடுத்தடுத்து `பலி'; பழிவாங்க கிளம்பிய பாம்புகள்?'' - ஈரக்குலை நடுங்கி நிற்கும் கிராமம் - உதறலில் உ.பி.

Update: 2024-10-24 10:17 GMT

உத்தர பிரதேசத்தில், பாம்பு பழிவாங்குவதாக அச்சமடைந்த கிராம மக்கள், பொதுவெளியில் உறங்கி வரும் சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம் சதர்பூரில், பாம்பு கடித்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாம்பு பழிவாங்குவதாக எண்ணி அச்சமடைந்த கிராம மக்கள் வீடுகளில் உறங்குவதை தவிர்த்து, பொதுவெளியில் உறங்கி வருகின்றனர். இதனையடுத்து, வனத்துறையினரும், மீரட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட 4 பாம்பாட்டிகளும், பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது வரை பாம்பு பிடிபடாததாக கூறப்படும் நிலையில், குழந்தைகளை வெளியூருக்கு அனுப்ப கிராம மக்கள் ஆலோசித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்