மாணவர் சங்க தேர்தல் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-02-12 13:07 GMT

அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்க தேர்தலில் போட்டியிட்டவர்கள் மீண்டும் போட்டியிட முடியாது என்ற லிங்டோ கமிஷன் அறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு விசாரணைக்கு வந்த நிலையில், லிங்டோ கமிஷன் அறிக்கை எவ்வித விவாதமும் இன்றி அளிக்கப்பட்டதுடன், இதுபோன்ற பரிந்துரையை அமல்படுத்த யுஜிசி கூறி வருவதாகவும், இந்த பரிந்துரை தன்னிச்சையானது, நியாயமற்றது என மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது..

வாதத்தை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், பொதுநல மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்