கேரளாவை கதிகலங்க வைத்த காட்சி - சோகத்தில் முடிந்த ஓணம் கொண்டாட்டம்

Update: 2024-09-18 12:03 GMT

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற படகுப் போட்டியில், இரண்டு படகுகள் மோதி ஒருவர் உயிரிழந்தார். செங்கனூர் பகுதியில் நடைபெற்ற படகுப் போட்டியில் பல படகுகள் பங்கேற்றன. அங்குள்ள ஏரியில் படகுகள், போட்டி போட்டு வேகமாகச் சென்றன. படகுகளின் இரு பக்கங்களிலும் இருந்து இளைஞர்கள் துடுப்புகளால் படகை முன்னோக்கி நகர்த்தினர். அப்போது திடீரென இரு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதின. படகு கவிழந்த நிலையில், படகிலிருந்தவர்கள் நீருக்குள் மூழ்கியதை தொடர்ந்து பொதுமக்களால் மீட்கப்பட்டனர். அப்பு என்ற விஷ்ணுதாஸ் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்