வங்கத்தில் வெடித்த வன்முறை.. எல்லையில் பதற்றம்

Update: 2024-07-19 16:58 GMT

வங்கதேசம் முழுவதும் வன்முறை வெடித்ததால், இந்தியா, நேபாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்கள், எல்லை வழியாக இந்திய பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு, அசாம் மற்றும் மேகாலயா மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. வங்கதேசத்தில் தற்போதைய சூழல் காரணமாக, அங்குள்ள இந்தியர்கள் வெளியே பயணிப்பதை தவிர்க்க வேண்டுமென, இந்திய தூதரகம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்